வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

செல்லக்கனி வாயால்

பாடல் இயக்கம் : வீரமணி ஐயர்
ராகம்: பிருந்தாவன சாரங்கா
தாளம்: ஆதி
பாடலின் ஒலி வடிவம் கேட்க‌

செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே
வெல்லம் என இனிக்கும்
வேலவனின் நாமம்
செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே..

செல்வ குமரன் குகன்
செந்தில்பதி முருகன்
நல்லை கந்தன் உனக்கு 
நல்லதெல்லாம் ஈய்வான்
செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே..


உள்ளம்தனை உருக்கும்
உந்தன் வினை கருக்கும்
கள்ளம் கபடம் இல்லா
கலை ஞானத்தை பெருக்கும்
மெல்ல குழைந்து வரும்
மேனியெல்லாம் சிலிர்க்கும்
அல்லல் தனை அகத்தும்
அருளும் நிறைந்திருக்கும்

செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே
வெல்லம் என இனிக்கும்
வேலவனின் நாமம்
செல்லக்கனி வாயால்
சொல்லடா கண்ணே..

1 கருத்து: