திங்கள், 29 ஜூலை, 2013

சின்ன வயதினில் நீ

பாடல் இயக்கம் : வீரமணி ஐயர்
குரல்: சுதா இரகுநாதன்
ராகம்: மாண்டு
தாளம்: ஆதி
                                                                   பாடலின் ஒலி வடிவம் கேட்க‌

சின்ன  வயதினில் நீ செய்த குரும்பையெல்லாம்
சிந்தனை செய்து பாரடா முருகா.. !
சின்ன  வயதினில் நீ செய்த குரும்பையெல்லாம்
சிந்தனை செய்து பாரடா முருகா.. !
முருகா... !

கன்னல் மொழி சிவன் காதில் உபதேசங்கள்
சொன்னதும் சொற்கேளாமல் சற்குரு ஆனதும்
சின்ன  வயதினில் நீ செய்த குரும்பையெல்லாம்
சிந்தனை செய்து பாரடா முருகா.. !
முருகா... !

மாங்கனி வாங்க அன்று மாமயில் மீதினிலே
மாநிலம் வலம் வந்து விண்ணிலே ஏமார்ந்தாய்
தீங்கடும் கோபம்கொண்டு ஆண்டியாய் வேடம் பூண்டு
தீநகையாபரனனே ஞானப்பழம்  வாங்கி
சின்ன  வயதினில் நீ செய்த குரும்பையெல்லாம்
சிந்தனை செய்து பாரடா முருகா.. !
முருகா... !

நாவல் மரத்திலிருந்து நாவில் சுடும்பழமோ
நாவில் சுடாத பழமோ நாடுவாய் என்றுரைக்க‌
ஆவல் மிகுந்த ஒளவை நாவல் பழம் எடுத்தூத‌
ஆனந்தமாக பாட்டி அதிகம் சுட்டதோ என்று
சின்ன  வயதினில் நீ செய்த குரும்பையெல்லாம்
சிந்தனை செய்து பாரடா முருகா.. !
முருகா... !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக