வெள்ளி, 4 டிசம்பர், 2015

குமரன் பஞ்சமூர்த்தி

குமரன் பஞ்சமூர்த்தி ஈழத்து நாதஷ்வர இசைக்கலைஞர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றுக்கொண்டுவரும் ஒருவராக திகழ்கின்றார்.

இவருடைய சிங்கார வேலனே எனும் பாடலின் நாதஷ்வர வடிவம் காணும் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைப்பதோடு ஈழத்தின் இசை வல்லமையின் பெருமையையும் பிரதிபலிப்பதாக காணப்படுகின்றது.

அந்த அருமையான பாடலின் நாதஷ்வர வடிவத்தை இங்கே பகிர்வதற்கு நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.


என்றும் கேட்டிராத பாணியில் #நாதஸ்வரம் மற்றும் #வயலினுடன் "#சிங்கார #வேலன்" பாடல்நாத இளவரசன் #குமரன் மற்றும் #தவில் எதிர் #வயலின் மற்றும் #தபேலா #கடம் #பாட்கேட்டுப் பாருங்கள் அதிர வைக்கும் கானொளிநாதஸ்வரம் :-பஞ்சமூர்த்தி குமரன்தவில் :-கே.பி.விபூர்ணன்வயலின் :-சு.கோபிதாஸ்தபேலா :-ச.விமல்சங்கர்கடம் :-த.லக்ஸ்மன்பாட் :-பானுகீ.போட் :-மைக்கல்கிட்டார் :-சுதர்சன்
Posted by Thayaparan Laksman on Wednesday, 2 December 2015

யாழ்ப்பாணம் கோண்டாவில் எனும் ஊரில் பிறந்த குமரன் பஞ்சமூர்த்தி புகழ்பூத்த காலஞ்சென்ற நாதஷ்வரக் கலைஞரான பஞ்சமூர்த்தியின் புதல்வர்களில் ஒருவராவார். இவர் தனது தந்தையிடமிருந்து 6 வயது முதல் நாதஷ்வர கலையினை பயிலத்தொடங்கி தனது 10 ஆவது வயதில் மேடைகளிலே நாதஷ்வர கச்சேரிகளை நடத்துமளவிற்கு முறையாக கலையினை பயின்றார்.

தற்போது இவர் ஈழத்தில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் தனது கலையை வெளிப்படுத்தி வருவது ஈழ மக்களாகிய எமக்கு மிகவும் பெருமை தரும் ஒன்றாகும். ஈழம், ஐரோப்பா, கனடா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடை பெற்றுவரும் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஆலய உற்சவங்களில் இவர் ஆற்றும் பணியானது பாராட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக