எம் நாட்டு புலவர்கள் பலர், பல பொருள்களில் அமைந்த தாலாட்டு பாடல்களை எழுதியிருந்த போதிலும், தாலாட்டு பாடல் என்று சொன்னதும் எமக்கு ஞாபகம் வருவது எமது தாய் எம்மை தூங்க வைக்க பாடிய பாடலே.
அந்த வயதில் எமக்கு பாட்டின் கருத்து விளங்கி இருக்காத போதிலும் அதன் இசையையும் அம்மாவின் குரலையுமே இரசித்திருக்கிறோம். அந்த இனிமையான சேர்க்கை உலகில் எந்த பிரபல்யமான இசையமைப்பாளர்களால் இசையமைத்தும், அதற்கு எந்த பிரபல்யமான பாடகர்களால் பாடியும் பெற்றுகொள்ளமுடியாததொன்று.
எம் ஈழத்தில் பொதுவாக பாடப்படும் ஒரு தாலாட்டு பாடலை இங்கு நோக்குவோம் :
ஆ(யா)ராரோ ஆ(யா)ரிவரோ
ஆ(யா)ரடிச்சு நீயழுதாய் அரிய கண்ணால் நீர் வழிய
அடிச்சாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணி வைப்போம்
ஆ(யா)ராரோ ஆ(யா)ரிவரோ
எம் ஈழத்தில் பொதுவாக பாடப்படும் ஒரு தாலாட்டு பாடலை இங்கு நோக்குவோம் :
ஆ(யா)ராரோ ஆ(யா)ரிவரோ
ஆ(யா)ரடிச்சு நீயழுதாய் அரிய கண்ணால் நீர் வழிய
அடிச்சாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணி வைப்போம்
ஆ(யா)ராரோ ஆ(யா)ரிவரோ
ஆ(யா)ரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சாரார் கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம்
கண்ணே யடிச்சாரார் கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம்